Tamil

Magazine - Tamil
செயல் களத்தில் ஜீவனை அர்ப்பணிப்போம்!
Wednesday, Apr 01, 2026

arrow Click to enlarge.

செயல் களத்தில் ஜீவனை அர்ப்பணிப்போம்!

உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!

ஜிம் எலியட்

நமது இயக்கத்தின் முன்னாள் பொது காரியதரிசி திரு. பேட்ரிக் ஜாஷ்வா அண்ணன் அவர்களின் மூன்றாவது மகனாக பிறந்தவர் ஜிம் எலியட். 23 வயதான இவர், தன்னுடைய இளம் வயதை தேவையுள்ள நமது தேச மக்களாகிய ஜார்கண்ட் மாநிலத்தில் வசித்து வரும் மால்தோ மக்களுக்காக அர்ப்பணித்தார்.

மால்தோ மக்கள் மலேரியா, காலரா, T.B போன்ற வியாதிகளால் அழிந்துவருவதைக் கேள்விப்பட்ட ஜிம் எலியட், அவர்களுக்கு உதவி செய்திட, அந்த மக்களை அழிவிலிருந்து காப்பாற்றிட தன்னைத் தேவனுக்காக அர்ப்பணித்தார்.

ஜிம் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர். மேலும், தனது வாழ்க்கையை அனைத்து விதத்திலும் வசதியாக அமைத்துக் கொள்ள வாய்ப்புகள் இருந்தபோதிலும், அவற்றையெல்லாம் விரும்பாமல், மால்தோ மக்களின் நல்வாழ்விற்காக தன்னுடைய ஜீவனை அர்ப்பணித்தார். ரோமர் 12:1இன்படி தேவனுடைய இரக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக ஜிம் தன்னை ஜீவபலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்.

கிறிஸ்தவர்களாகிய நமக்கு முதலும், முக்கியமானதுமான பணி எது? நமது சரீரங்களைத் தேவனுக்கு ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பதுதான். பவுல் சரீரம் என்று சொல்லும்போது நமது ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற முழு மனிதனையும் குறிப்பிடுகிறார். நாம் ஒப்புக்கொடுக்க வேண்டிய சரீரம் ஜீவனுள்ளதாக, கறையற்றதாக இருக்க வேண்டும். தேவனுடைய இரக்கத்திற்குப் பதிலளிக்கும் விதமாக நாம் நமது சரீரங்களை ஜீவபலிகளாக ஒப்புக்கொடுக்க வேண்டும். ஏனென்றால், இயேசுகிறிஸ்து தமது சரீரத்தை நமக்காகப் பலியாக ஒப்புக்கொடுத்தார். இதுதான் தேவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் ஆவிக்குரிய ஆராதனை. இப்படிப்பட்ட பலி அவருக்கு பரிசுத்தமும், பிரியமுமாயிருக்கும்.

அன்பான வாலிபர்களே! அவர் நமக்காக செய்திருப்பதுடன் ஒப்பிட்டு பார்த்தால், நாம் அவருக்காக செய்வதெல்லாம் மிகமிகக் குறைவே! எனவே, நீங்கள் இந்த இளம் வயதில் ஜீவனை அவருக்கென்று அர்ப்பணியுங்கள்.

LEAD Training Programme மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆண்டவருடைய கிருபையால் 55 வாலிபத் தலைவர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர். மார்ச் மாதம் பம்மல் பகுதியில் புதிதாக Youth Fellowship ஆரம்பிக்க கர்த்தர் கிருபைச்செய்தார். மே 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சேலம், டேனிஷ்பேட்டை பெத்தேல் வளாகத்தில் நடைபெறவுள்ள தமிழ் மாநில முகாமிற்காக ஜெபியுங்கள். இந்த ஆண்டு சுமார் 1000 வாலிபர்கள் கலந்துக்கொள்ள வேண்டும். உங்களை அன்புடன் அழைக்கிறோம். உங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்!

கர்த்தர்தாமே உங்களை அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக. ஆமென்!

கிறிஸ்துவின் பணியில்,

ஜெ. டேனியல் அருள்மணி


  View / Download :   Apr-Kerith2026Tamil.pdf

>> Archives
2022 (8)
2021 (9)
2016 (12)
2012 (12)